/* */

மோகனூர் அருகே விவசாயிகளுக்கு கரும்பு சோகை மறுசுழற்சி விழிப்புணர்வு

மோகனூர் அருகே விவசாய தோட்டங்களில் கரும்பு சோகை மறுசுழற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

மோகனூர் அருகே விவசாயிகளுக்கு கரும்பு சோகை மறுசுழற்சி விழிப்புணர்வு
X

மோகனூர் அருகே விவசாய தோட்டங்களில் கரும்பு சோகை மறுசுழற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கரும்பு வயல்களில், சேகை மறுசுழற்சி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஒருவந்தூர் கிராமத்தில், விவசாய தோட்டங்களில், கரும்பு சோகையை எரிக்காமல், இயந்திரம் மூலம் துண்டித்து, வயலிலேயே மறுசுழற்சி செய்யும் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வேளாண் அறிவியல் நிலைய தலைவர் ஷர்மிளாபாரதி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசும்போது, கரும்பு அறுவடை செய்தபின், வீணாகிய சோகைகளை, ஒன்றாக சேர்த்து எரிப்பதால், கார்பன்-டை -ஆக்சைடு மற்றும் கார்பன்-மோனாக்சைடு நச்சு வாயுக்கள் வெளியேறுகின்றன. இதனால், அருகில் சாகுபடி செய்துள்ள பயிர்கள் மற்றும் மண் வளம் பாதிக்கப்படுகிறது. எனவே கரும்பு சோகை மறுசுழற்சி செய்ய வேண்டும் என்றார்.

உதவி பேராசிரியர் சத்யா, கரும்பு சோகைகளை இயந்திரம் மூலம் துண்டித்து, அந்த வயலிலேயே மறுக்கிவிடுவதால், மண் வளத்தில் மாற்றம் ஏற்பட்டு, களைகள் கட்டுப்படுத்தப்படுவதுடன், மண்ணில் ஈரப்பதம் நிலைத்து நிற்கும். மேலும், சோகையை மறுக்கிவிட்டபின், அது நன்றாக மக்கி, அந்த வயலிலேயே எருவாக மாறி, மண்ணின் வளம் பாதுகாக்கப்படுகிறது என்றார். உதவி பேராசிரியர் பால்பாண்டி மற்றும் திரளான விவசாயிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Feb 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  4. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  5. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  6. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  9. திருவள்ளூர்
    திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் மனு அளிக்க வந்த...
  10. வீடியோ
    Desperate ஆன SRH ஓனர் | பயந்து துள்ளி குதித்த Sakshi | #csk #srh...