/* */

நாமக்கல் அருகே கோவில் தேரோட்டத்தில் திடீர் தீ விபத்து: மின்வாரிய பணியாளர் காயம்

நாமக்கல் நகரில் தேரோட்டத்தின் போது, மின்சார கம்பியில் தேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் மின்வாரிய ஊழியர் காயமடைந்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே கோவில் தேரோட்டத்தில் திடீர் தீ விபத்து: மின்வாரிய பணியாளர் காயம்
X

பைல்படம்.

நாமக்கல் நகரில் தேரோட்டத்தின் போது, மின்சார கம்பியில் தேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் மின்வாரிய ஊழியர் காயமடைந்தார்.

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட, இபி காலனியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த ஒரு வாரமாக தேர்த்திருவிழா நடைபெற்றது. தேரின் முக்கிய நிகழ்வாக இன்று மதியம் தோரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மனை வைத்து, வீதி வழியாக தேரை இழுத்துச்சென்றனர். அப்போது உயர் அழுத்த மின் கம்பியின் மீது தேர் உரசியதால், தீப்பொறி ஏற்பட்டு தேரின் ஒரு பகுதி சேதமடைந்தது.

இதனால், தேரை இழுத்து வந்தவர்கள் தேரை அப்படியே நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். அப்போது மின் கம்பியை சரிசெய்ய முயன்ற மின்வாரிய பணியாளர் குமரேசன் என்பவருக்கு காயம் ஏற்பட்டு அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் கிடைத்ததும், அங்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்களை அப்புறப்படுத்தி, தேரை கோயில் அருகில் நிறுத்தச் செய்தனர். சுவாமி தேரில் மின்கம்பி உரசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 25 April 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?