ரூ. 1 கோடி மதிப்பீட்டில் துணை மின் நிலைய கட்டுப்பாட்டு அறை; துவக்கி வைத்த அமைச்சர்
namakkal news, namakkal news today- ராசிபுரத்தில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலைய கட்டுப்பாட்டு அறையை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
namakkal news, namakkal news today- தமிழ்நாட்டில் தொழிற்துறை, விவசாயம், நகர்ப்புற மற்றும் ஊரக மேம்பாடு ஆகியவற்றின் வளர்ச்சியின் காரணமாக மின்தேவை அதிகரித்து வருகிறது. மின்தேவைக்கு ஏற்றவாறு, மக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க செய்யும் உயரிய நோக்குடன், தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இயக்கத்தில் உள்ள துணை மின் நிலையங்களின் திறனை மேம்படுத்தும் விதமாக கூடுதல் மின் மாற்றிகள் அமைத்தல், சரியான மின் அழுத்தத்துடன் கூடிய சீரான மின்சாரம் வழங்குதல் போன்ற பணிகளை, தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாக, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், ராசிபுரம் 110/22 கே.வி. துணை மின் நிலையத்தில், ரூ.1 கோடியே 2 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பீட்டில், மேம்படுத்தப்பட்ட துணை மின் நிலைய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய கட்டுப்பாட்டு அறையை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ராசிபுரம் நகராட்சித் தலைவர் கவிதா சங்கர், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், தமிழ்நாடு மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், செயற்பொறியாளர் சபாநாயகம், உதவி செயற்பொறியாளர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.