/* */

பேருந்து வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

பெரியசோளிபாளையம் பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரி, மாணவ மாணவிகளும், கிராம மக்களும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

HIGHLIGHTS

பேருந்து வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக வந்திருந்த மாணவ மாணவிகளும், கிராம மக்களும் 

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, பெரியசோளிபாளையம் கிராம மக்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகள், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

பரமத்தி வேலூர் அருகே உள்ள பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், குமாரசாமிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான மக்கள் பல்வேறு பணிகளுக்காக பரமத்திவேலூர் வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள்.

இதுபோல் இப்பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் வெளியூர்களில் உள்ள பள்ளி, கல்லூரி சென்று வருகின்றனர். இந்த பகுதியில், பேருந்து வசதி இல்லாததால் மேற்குறிப்பிட்ட கிராம மக்கள் ஏறத்தாழ 7 கி.மீ., தூரம் நடந்து கபிலர்மலை சென்று பின் அங்கிருந்து பேருந்துகளில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால் மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பு தொழிலாளர்களுக்கும் மற்றும் பள்ளி, கல்லூரி முடித்து வீடு திரும்பும் மாணவ, மாணவியர் உள்ளிட்ட மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது.

பேருந்து வசதியில்லாதது தொடர்பாக ஏற்கனவே பல முறை புகார் செய்துள்ளோம். எனினும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் நலன் கருதி பெரியசோளிபாளையம் பகுதிக்கு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Updated On: 10 Oct 2023 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...