/* */

நாமக்கல் மாவட்டத்தில் விடிய விடிய போலீஸ் வேட்டை: 38 ரவுடிகள்கைது

நாமக்கல் மாவட்டம் முழுவதும் விடிய விடிய போலீசார் நடத்திய தீவிர வேட்டையில் 38 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் விடிய விடிய  போலீஸ் வேட்டை: 38 ரவுடிகள்கைது
X

மாநிலம் முழுவதும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், ரவுடிகள், கொலை, கொள்ளை, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு கைதாகி, ஜாமீனில் உள்ள ரவுடிகள், தலைமறைவாக உள்ளவர்கள் ஆகியோரை கைது செய்ய டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, நாமக்கல் மாவட் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, ரவுடிகளை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்றது.

நேற்று காலை முதல், இரவு வரையும், பின்னர் இரவு முழுவதும் போலீஸ் படையினர், மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள், சிறை சென்றுவிட்டு ஜாமீனில் வெளியே வந்தவர்கள், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் நபர்கள் என கண்டறியப்பட்ட 38 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 25 Sep 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...