/* */

சேலம்- கரூர் இரட்டை ரயில் பாதை பணிகளுக்கு ரயில்வே துறை ஒப்புதல்

சேலம் -கரூர் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கையை (டி.பி.ஆர்) தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சேலம்- கரூர் இரட்டை ரயில் பாதை பணிகளுக்கு ரயில்வே துறை ஒப்புதல்
X

பைல் படம்.

தமிழகத்தில் சேலம் - நாமக்கல் - கரூர் உள்ளிட்ட 4 வழித்தடங்களில் இரட்டை ரயில் பாதைகள் அமைப்பதற்கான திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணிகளை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது. மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில் முக்கிய ரயில்வே திட்டங்களை செயல்படுத்த ரயில்வே சார்பில் ஆய்வு நடத்தப்படுகிறது. அதன் முடிவுகளுக்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்த ரயில்வே வாரியம் ஒப்பதல் அளித்து வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் ரயில் போக்குவரத்து தேவை அதிகரித்துள்ள திருச்சி - ஈரோடு, சேலம் - நாமக்கல் - கரூர், கரூர் - திண்டுக்கல், விழுப்புரம் - காட்பாடி ஆகிய 4 வழித்தடங்களில் இரட்டை ரயில் பாதைகள் அமைப்பதற்கான பணிகளை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் கூறுகையில், கொரோனா ஊரடங்குக்குப்பின் பெரும்பாலான ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் புதிய ரயில் பாதைகள், இரட்டை பாதைகள் அமைப்பதற்கான பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் 4 வழித்தடங்களில் இரட்டை ரயில் பாதைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி - ஈரோடு, சேலம் - நாமக்கல் - கரூர், கரூர் - திண்டுக்கல், விழுப்புரம் - காட்பாடி ஆகிய 4 வழித்தடங்களில் இரட்டை ரயில்பாதை அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கையை (டி.பி.ஆர்) தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இப்பணி 6 மாதங்களில் முடிவடையும். அதன்பிறகு, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து, மத்திய பட்ஜெட்டில் இந்த திட்டங்கள் செயல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 16 Sep 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்