Begin typing your search above and press return to search.
பெட்ரோல், டீசல் விலை இன்று 7வது நாளாக தொடர்ந்து உயர்வு
இன்று 7வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
HIGHLIGHTS
மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் கம்பெனிகள், சர்வதேச விலை நிலவரத்துக்கு இணையாக, தாங்களே விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.
ரஷ்யா-உக்ரைன் போரால் கடந்த 1 மாதமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, எண்ணெய் கம்பெனிகள் மீண்டும், கடந்த 22ம் தேதி முதல் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த துவங்கியுள்ளன. அவ்வகையில், இன்று 29ம் தேதி மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நாமக்கல் பகுதியில் இன்று காலை 6 மணி முதல், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 76 பைசா உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் ரூ.106.57 ஆகவும், பிரிமியம் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 76 பைசா உயர்த்தப்பட்டு ரூ.110.88 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் டீசலுக்கு 66 பைசா உயர்த்தப்பட்டு ரூ.96.64 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.