/* */

நாமக்கல்லில் ஆம்புலன்ஸில் வந்த நோயாளி: நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த நீதிபதி

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 1,797 வழக்குகளில், சமரச தீர்வு மூலம் ரூ. 6.50 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் ஆம்புலன்ஸில் வந்த நோயாளி: நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த நீதிபதி
X

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், சாலை விபத்தில் காயம்பட்டு, ஆம்புலன்ஸில் வந்த நபரிடம், நீதிபதிகள் கோர்ட்டில் இருந்து வெளியே வந்து விசாரணை நடத்தினார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 1,797 வழக்குகளில், சமரச தீர்வு மூலம் ரூ. 6.50 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில், தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. மாவட்ட தலைமை நீதிபதி குணசேகரன் தலைமை வகித்தார். நீதிபதிகள் முனுசாமி, கிருஷ்ணன் மற்றும் வட்ட அளவிலான சட்ட பணிகள் குழுவில் உள்ள நீதிபதிகள், வக்கீல்கள் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. முதன்மை குற்றவியல் நீதிபதி சாந்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் விஜய்கார்த்திக் ஆகியோர் வழக்கு விசாரணையை மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.

கோர்ட்டில், விபத்துகள் தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள் , மின் பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர, புதிதாக தாக்கல் செய்ய உள்ள தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்சினைகளுக்கும் சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகாண வழிவகை செய்யப்பட்டது.

ஆம்புலன்சில் விசாரணை

நாமக்கல் இ.பி.காலனியை சேர்ந்தவர் தஸ்தகிரி (65). இவர் கடந்த ஆண்டு ரோட்டில் நடந்து சென்றபோது கார் மோதி படுகாயம் அடைந்தார். நடக்க முடியாத இவரை நேற்று ஆம்புலன்ஸில் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். நீதிபதிகள் கோர்ட்டுக்கு வெளியே வந்த ஆம்புலன்சில் இருந்த அவரிடம், நேரில் விசாரணை செய்தனர். அவர் சமரச தீர்வுக்கு ஒப்புக்கொண்டதால், ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் விபத்து இழப்பீடு பெறுவதற்கான உத்தரவை அவரது மனைவி கமலத்திடம் நீதிபதிகள் வழங்கினர்.

நாமக்கல் அருகே உள்ள செல்லியாயிபாளையத்தை சேர்ந்தவர் இன்ஜினியர் சரவணன் (வயது32). இவர் ஹைட்ராலிக் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி நாமக்கல் போஸ்டல் நகரில் பழுதாகி நின்றுகொண்டு இருந்த டிப்பர் லாரியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது லாரியின் பின்பகுதியில் இருந்த ஜாக் திடீரென இறங்கியதால் சரவணன் உடல்நசுங்கி இறந்தார்.

இதேபோல் எருமப்பட்டி ஒன்றியம் போடிநாயக்கன்பட்டி அருகே உள்ள ராசாபுதூரை சேர்ந்தவர் கார்த்திக் (36) கார் டிரைவர் . இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி அலங்காநத்தம் பிரிவு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் இவர் மீது மோதியது. இந்த இரு வழக்குகளிலும் வக்கீல் வடிவேல் வாதாடி வந்தார். நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்ற விசாரணையில், இறந்து போன சரவணன் குடும்பத்திற்கு ரூ.48 லட்சத்து 18 ஆயிரமும், படுகாயம் அடைந்த கார்த்திக் குடும்பத்திற்கு ரூ.23 லட்சத்து 80 ஆயிரமும் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முன்வந்தன. இதையடுத்து இருவழக்குகளிலும் சமரசம் ஏற்பட்டு, இழப்பீடு பெறுவதற்கான உத்தரவை மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் வழங்கினார்.

1,797 வழக்குகளுக்கு தீர்வு

மாவட்டத்தல் உள்ள, திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, சேந்தமங்கலம் மற்றும் குமாரபாளையம் கோர்ட்டுகளிலும் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் மொத்தமாக 2,399 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இவற்றில் 1,797 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.6 கோடியே 57 லட்சத்து 49 ஆயிரத்து 761 இழப்பீடு வழங்கப்பட்டு சமரசம் செய்யப்பட்டது.

Updated On: 14 May 2023 4:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  2. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  3. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  6. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  8. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்