நாமக்கல்லில் பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு சார்பில் சாதனை விளக்க பிரச்சாரம்
நாமக்கல்லில் பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பிரச்சாரம் நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சிறுபான்மையினர் பிரிவு சார்பில், மத்திய பா.ஜ.க. அரசின் சாதனைகளை விளக்கி வீடு, வீடாக விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின்படி, நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ. தலைவர் சத்தியமூர்த்தி மேற்பார்வையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ சிறுபான்மையினர் அணி சார்பில், மத்திய பா.ஜ..க அரசின் 9 ஆண்டுகால சானைகளை விளக்கி வீடு வீடாக விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
நாமக்கல் கிழக்கு மாவட்டப பா.ஜ.க. சிறுபான்மையினர் அணி தலைவர் ஷாஜஹான் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனைகள் மற்றும் மத்திய அரசின் நலதிட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கி கூறி, வீடுதோறும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். சிறுபான்மை பிரிவு மாவட்ட பொதுச்செயலாளர் ரஜியாபேகம், துணைத்தலைவர்கள் அலாவுதீன், மும்தாஜ்பேகம் மற்றும் சிறுபான்மை பிரிவு செயற்குழு உறுப்பினர்கள் மீரா,சாபிருன், அக்பர்பாஷா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, வீடு வீடாகச் சென்று பா.ஜ.க. அரசின் சாதனைகளை எடுத்துக்கூறினார்கள்.
பின்னர் இஸ்லாமியர்கள் வீட்டு கதவுகளில் பாரத பிரதமர் மோடியின் ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி நடைபெற்றது. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நடைபயணத்தில், நாமக்கல் வரும் போது சிறுபான்மை பிரிவினர் ஒன்றினைந்து அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.