/* */

நாமக்கல் மாவட்டத்தில் 25 உள்ளாட்சி பதவிகளுக்கு அக். 9ல் தேர்தல்: நாளை வேட்புமனு

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 25 உள்ளாட்சி பதவிகளுக்கு அக். 9ல் தேர்தல் நடைபெறுவதால், வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 25 உள்ளாட்சி பதவிகளுக்கு அக். 9ல் தேர்தல்: நாளை வேட்புமனு
X

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுடன் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கும் அக்டோபர் 9-ந் தேதி இடைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 6-வது வார்டு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவி (பொது), எருமப்பட்டி ஒன்றியத்தில் 15-வது வார்டு ஒன்றியகுழு உறுப்பினர் பதவி (பொது), கோப்பணம்பாளையம், திம்மநாயக்கன்பட்டி, ஆவல்நாயக்கன்பட்டி, கூடச்சேரி, நடுகோம்பை பஞ்சாயத்து தலைவர்கள் பதவிகளுக்கு அடுத்த மாதம் 9-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

கிராமப்பஞ்சாயத்து வார்டுகளில், மண்டகபாளையம் 3-வது வார்டு, கோணங்கிப்பட்டி 9-வது வார்டு, பவித்திரம் 2-வது வார்டு, இருக்கூர் 7-வது வார்டு, தின்னனூர்நாடு 5-வது வார்டு, பிள்ளாநத்தம் 4-வது வார்டு, என்.புதுப்பட்டி 8-வது வார்டு, பெரப்பன்சோலை 2-வது வார்டு, கார்கூடல்பட்டி 6-வது வார்டு, மங்களபுரம் 8-வது வார்டு, செருக்கலை 9-வது வார்டு, பில்லூர் 4-வது வார்டு, காரைக்குறிச்சிபுதூர் 3-வது வார்டு, எஸ்.உடுப்பம் 6-வது வார்டு, திருமலைப்பட்டி 7-வது வார்டு, பொட்டணம் 3-வது வார்டு, உத்திரகிடிகாவல் 7-வது வார்டு, ஆண்டிபாளையம் 6-வார்டு ஆகியவற்றிற்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள மொத்தம் 25 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுவதால், இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று 15ம் தேதி தொடங்கும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய 22-ந் தேதி கடைசி நாளாகும். அக்.9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, பதிவான வாக்குகள் 12ம் தேதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 14 Sep 2021 3:20 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  2. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  3. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  4. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  5. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  6. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  7. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  8. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  9. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  10. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!