மோகனூரில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
மோகனூரில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.
HIGHLIGHTS
பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் ஏற்பட்டிருந்த கற்றல் இடைவெளியை ஈடுகட்டி, சரிசெய்ய தமிழ்நாட்டில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டத்தின் தொலைநோக்கு, 2025 க்குள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதாகும். மோகனூர் வட்டார வள மையத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளில் 4, 5-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு முதல் பருவத்திற்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி மோகனூர் வட்டார வள மையத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் செயல்பாடுகளுடன் கூடிய பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன உதவி பேராசிரியர் பழனிவேல்ராஜ், வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலர் இளங்கோ, பயிற்சி நிறுவன விரிவுரையாளர் முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதனை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மணிவண்ணன், மாவட்ட திட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் குமார் ஆகியோர் பார்வையிட்டனர். மோகனூர் வட்டாரத்தை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி முகாமில் கொண்டு பயிற்சி பெற்றனர்.