Begin typing your search above and press return to search.
சேந்தமங்கலம் பகுதியில் 18ம் தேதி மின்சாரத்தடை அறிவிப்பு
பராமரிப்பு பணிகள் காரணமாக சேந்தமங்கலம் பகுதியில் வருகிற 18ம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
இதுகுறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் கோட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வருகிற 18ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் நிறுத்தப்படும். இதனால், சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர்,பேரமாவூர், கொண்டமநாய்க்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துக்காபட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாய்க்கன்பட்டி, லக்கமநாய்க்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.