சேந்தமங்கலம் பகுதியில் வரும் 19ம் தேதி மின்நிறுத்தம் அறிவிப்பு
சேந்தமங்கலம் பகுதியில் வரும் 19ம் தேதி மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
சேந்தமங்கலம் பகுதியில் வரும் 19ம் தேதி மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் பகுதியில் சீரான மின்சார விநியோகம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும், துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையொட்டி, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் துணை மின் நிலைத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வருகிற 19ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாõரம் நிறுத்தப்படும். இதனால் சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர், பெரமாவூர், கொண்டமநாய்க்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துக்காப்பட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாய்க்கன்பட்டி, லக்கமநாய்க்கன்பட்டி, சாலப்பாளையம், சிவநாய்க்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் மற்றும் சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில், வரும் 19ம் தேதி சனிக்கிழமை, காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.