/* */

ஜவுளி, நகை கடைகளை திறக்க வணிகர் சங்கத்தினர் கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் ஜவுளிக்டைகள் மற்றும் நகைக்கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று சப் கலெக்டரிடம் வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

HIGHLIGHTS

ஜவுளி, நகை கடைகளை திறக்க வணிகர் சங்கத்தினர் கோரிக்கை
X

நாமக்கல்லில் நடைபெற்ற வணிகர் சங்கத்தினருக்கான ஆலோசனைக் கூட்டத்தில் சப் கலெக்டர் கோட்டைக்குமார் பேசினார். அருகில் நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம்.

நாமக்கல் மாவட்டத்தில் ஜவுளிக்டைகள் மற்றும் நகைக்கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று சப் கலெக்டரிடம் வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இருப்பினும் அரசு அறிவித்துள்ள பட்டியல் 1ல் உள்ள 11 மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டம் இடம்பெற்றுள்ளதால், குறிப்பிட்ட சில தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. பால், காய்கறி, மளிகை, பேக்கரி, ஓட்டல்கள், டீக்கடைகள், கட்டுமானப்பொருட்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் போன்ற கடைகள் மட்டுமே திறக்க வேண்டும் என்று அரசு அனுமதி அளித்துள்ளது. ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. அண்டை மாவட்டங்களில் ஜவுளி மற்றும் நகைக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் இங்குள்ள வாடிக்கையாளர்கள் அங்கு சென்று வாங்குவார்கள் எனவே வியாபாரம் பாதிக்காமல் இருக்க நாமக்கல் மாவட்டத்திலும் ஜவுளி மற்றும் நகைக்கடைகள குறிப்பிட்ட நேரம் வரையில் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வணிகர் சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் மனு அளித்தனர்.

கலெக்டர் அறிவுறுத்தலின்படி, அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற்றது. சப்கலெக்டர் கோட்டைக்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம், தாசில்தார் தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்டத் தலைவர் ஜெயகுமார் தலைமையில் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில்கலந்துகொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளை திறக்க, மாவட்ட கலெக்டர் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும், வணிகர்களுக்கு சிறப்பு கொரேனா தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்றும் வணிகர் சங்கங்களின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கூட்டத்தில், அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை, வணிகர்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். கொரோன பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி வணிகம் செய்ய வேண்டும் என அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது. மேலும் அரசு விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Updated On: 30 Jun 2021 3:56 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்