Begin typing your search above and press return to search.
புதுச்சத்திரம் பகுதி மகளிர் குழுவினருக்கு கடன் உதவி வழங்கல்
namakkal news, namakkal news today- புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், மகளிர் குழுவினருக்கு ரூ. 59 லட்சம் கடன் உதவியை எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.
HIGHLIGHTS
namakkal news, namakkal news today- நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கதிராநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம், டாப்செட்கோ கடன் திட்டத்தின் கீழ் 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 59 லட்சம் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக செயாலாளர் கவுதம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடனுக்கான காசோலைகளை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் கதிராநல்லூர் கிளை திமுக செயலாளர் நடராஜன், பஞ்சாயத்து தலைவர் நடராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் தரணிபாபு, செங்கோட்டையன், ஜெயராமன், குமார், சேகர், சுரேஷ், ராமசாமி மற்றும் கூட்டுறவு சங்க செயலாளர் திருப்பதி உள்ளிட்ட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.