காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
கணவன் கோபித்துக்கொண்டு சொல்லவொணாத் தூரம் சென்றுவிட்ட சோகத்தில் வான் மனைவி தேம்பி அழுதாள், கண்ணீர் மழையாக.
HIGHLIGHTS
Rain Quotes in Tamil
மழை, வானில் இருந்து திரித்து விடப்படும் நீர்கயிறுகள். பூமியை குளிர்விக்கப் பிறந்த நீர்க்காதலி. நிலத்தின் வளத்தை நிர்ணயம் செய்யும் பொறியாளர். பயிர்களுக்கு நீர்ப்பால் கொடுக்கும் தாய். மழை மகிழ்ச்சியின் தூதுவன். பறவைகள், விலங்குகள், மரங்கள் என மழைநீரில் குளித்து சிலிர்க்கும் அற்புத காட்சிகள் இயற்கை பூமிக்கு அளித்த இயற்கை ஓவியம்.
காணக்கிடைக்காத சிற்றோடைகள், நீரூற்றுகள், ஆகாய அருவிகள், மலை மீது இருந்து குதிக்கும் நெட்டருவிகள் என எல்லாமே மழை எனும் மங்கையால் விளையும் சூட்சுமங்கள். மென்மையாக மனதை வருடும் தூறலாய் விழும் அவள் சீற்றம் கொண்டால் பெருமழையாக கொட்டித் தீர்க்கிறாள். நேரங்களில் இடியென மனதை அஞ்ச வைப்பாள்.மென் தூறலாக தட்டி துஞ்சவைப்பாள்.
Rain Quotes in Tamil
இப்படி பன்முகம் கொண்ட மழையவளை கொண்டாடும் கவிதை வரிகளை பார்க்கலாம் வாங்க.
மழைக் கவிதைகள்
நீர்த்திவலைகள் விரியும் வானம்...
மண்ணின் தாகம் தீர்க்கும் கானம்.
மண்வாசனை மனதை நனைக்குது...
மழைச்சாரல் நினைவுகளை தூண்டுது.
சில்லென்ற காற்றோடு ஒரு தூறல்...
சின்னச் சின்ன சந்தோஷங்கள் உள்ளே நிறையுது.
இடி முழக்கம் வானில் கேட்க...
இதயமோ உன் நினைவில் சிலிர்க்க...
மழைநீரில் காகிதக் கப்பல்...
கடந்து போன காலத்தின் சின்னம்.
வானவில்லின் வண்ணங்களில்...
வாழ்க்கையின் நம்பிக்கை ஒளிர்கிறது.
Rain Quotes in Tamil
இலைகளில் முத்து முத்தாய்...
இயற்கையின் அழகு சொட்டுகிறது.
சாரல் அழைக்க... மனம் ஏங்க...
சாயங்கால தேநீர் ஞாபகம் வருகிறது.
மழைத்துளிகள் ஜன்னலில்...
உன் முகம் நிழலாடுகிறது.
சில்லென்ற மழையில் குடைக்குள் நாம்...
சிறுகச் சிறுக காதல் மலருது.
மண் மீது விழும் மழையின் ஓசை...
இதயத்தின் இசையோடு சேருது.
Rain Quotes in Tamil
பெய்யும் மழையோடு பழைய பாடல்...
நெஞ்சில் ஏக்கங்கள் நிறையுது.
குளிர் காற்றில் மழைச்சாரல்...
கவிதை எழுதத் தூண்டுது.
கொட்டும் மழையில் குடையின்றி நனைய...
குழந்தை மனம் மீண்டும் துள்ளுது.
இரவெல்லாம் மழை ஓசை...
தூக்கமில்லா கண்களுக்கு தாலாட்டு.
மழைத்துளிகள் கூந்தலில்...
முகத்தில் முதல் காதலின் சிலிர்ப்பு.
Rain Quotes in Tamil
மயிலிறகாய் காற்றில் மழை...
மனமோ உன்னிடம் பறக்கிறது.
உடைந்த மேகங்களின் அழுகையோ...
உள்ளமும் ஏதோ கனக்கிறது.
வறண்ட நிலத்தில் பெய்யும் மழை...
வாழ்வில் கிடைத்த ஆறுதல்.
மழை வரும் முன்னே மின்னல் வெட்டு...
உன் வருகைக்கு உள்ளம் ஏங்குது.
மழைச்சாரல் நின்ற பின்...
ஈர மண்ணின் நறுமணம்.
Rain Quotes in Tamil
மழைநீர் தேங்கி நிற்கும் குட்டை...
மனம் போல தேங்கி நிற்கும் நினைவுகள்.
இடியோசை கேட்டு உள்ளம் நடுங்க...
உன் ஆறுதல் ஒரு அணைப்பு வேண்டுது.
மழைநீர் கண்ணீரோடு கலக்க...
யாரிடமும் சொல்ல முடியாத வலி.
அடை மழையில் எங்கும் வெள்ளம்....
அகப்பட்ட இடத்தில் அடைக்கலம்.
அடைமழை ஓய்ந்த பின் வெளிவரும் வெயில்...
அலைகழித்த உள்ளத்தில் புது நம்பிக்கை.
Rain Quotes in Tamil
மழை விட்டும் தூறல் தொடர்கையில்...
மனதில் நீயும் நிறைந்திருக்கிறாய்.
மழை பொழிகையில் மரத்தடியில்...
மனமெல்லாம் சுகமான அமைதி.
மழையின் சத்தமும், உன் குரலும்...
இரண்டிலும் இனம்புரியா இனிமை.
மழைத்துளியில் உன் முகம்...
மாயக்காட்சியாய் மனதில்.
வானம் அழுதாலும், மண் மகிழுது...
இயற்கையின் இந்த பரிமாற்றம் அழகு.
Rain Quotes in Tamil
மழைநீரில் கலக்கும் கண்ணீர்...
மறைக்க முடியாத உணர்வுகள்.
மழையின் ஓசை கேட்டு கொண்டே...
உறக்கம் வருகிறது.
நனைந்த சாலையில் உன் நிழல்...
நான் நனையாத மழையில்.
மழை கொட்டும் நேரத்தில் கையில் காபி...
சிந்தனைக்கு சிறந்த தருணம்.
மழையில் நனைந்ததோ இல்லை காதலில் நனைந்ததோ...
தெரியவில்லை.
Rain Quotes in Tamil
மழை நின்றபின், வான்வெளியில் நட்சத்திரங்கள்...
எண்ணி முடியாத ஆசைகள்.
மழையின் பின் வரும் சூரிய ஒளி...
கஷ்டத்தின் பின் வரும் சந்தோஷம் போல.
ஆடி மழையில் ஆடும் மயில்...
அழகோ அழகு!
ஒரு ஓரமாய் நின்று மழையை ரசிப்பது...
வாழ்வை ரசிக்கத் தெரிந்த மனது.
திடீரென பெய்யும் கோடை மழை...
எதிர்பாராத மகிழ்ச்சி போல.
Rain Quotes in Tamil
மழையில் நீ, நான், ஒரு குடை...
காலத்தால் அழியாத நினைவு.
இடைவிடாத மழையில் வழிந்தோடும் கண்ணீர்...
யாருக்கும் தெரியாது.
மழைக்கால இரவில், மெல்லிசை பாடல்....
ரம்மியமான சூழல்.
மண்ணோடு மழைநீர் கலக்கும் போது...
மனமோ உன்னோடு கலக்க ஆசைப்படுகிறது.
கன மழையில் சூடான பஜ்ஜி...
அலாதி சுவை!
Rain Quotes in Tamil
பலத்த மழை பெய்தாலும்...
உன்னை பார்க்க ஓடோடி வருவேன்.
குளிரில் கம்பளிக்குள் முடங்க...
கொஞ்சம் மழையும் இதமாக இருக்கிறது.
வானம் இருண்டு மேகங்கள் சூழ...
உன் நினைவு மட்டும் மனதை ஆக்கிரமிக்குது.
மழை ஓய்ந்து, வானம் தெளிய...
மனமும் ஒரு தெளிவு பெறுகிறது.