Begin typing your search above and press return to search.
நாமக்கல் நரசிம்ம சுவாமி தேர்த்திருவிழா: சிம்மன வாகனத்தில் சுவாமி வீதி உலா
நாமக்கல் அருள்மிகு நரசிம்மசாமி தேர்த்திருவிழாவில், சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் நகரில் பிரசித்திபெற்ற அருள்மிகு நரசிம்சாமி பங்குணி தேர்த்திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாம் நிகழ்ச்சியாக நேற்று 12ம் தேதி காலை சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்று, பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது.
மாலையில் அருள்மிகு நாமகிரித்தாயார் மற்றும் நரசிம்ம சுவாமிக்கு சிறப்பு அபிசேம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இரவு நரசிம்மசாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.