/* */

நாமக்கல் பகுதியில் நீண்ட நாட்களுக்குப்பின் கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல் பகுதியில் நீண்ட நாட்களுக்குப்பின்  கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கனமழை பெய்ததால் விவசாயிகள்மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 2 மாதங்களாக பருவமழை பெய்து வருகிறது. இருப்பினும் நாமக்கல் மாவட்டத்தில் வழக்கத்தைவிட குறைவான அளவே மழை பெய்துள்ளது. இதனால் ஆடிப்பட்டத்தில் விதைப்பு செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்தனர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

நாமக்கல் நகரில் தாழ்வான இடங்களில் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆடி மாதத்தில் பெய்த கனமழையை தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உழவுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 24 மணிநேரத்தில் பதிவான மழையளவு விபரம்:

குமாரபாளையம் 46 மி.மீ., நாமக்கல் 34 மி.மீ, கலெக்டர் அலுவலகம் 28 மி.மீ, பரமத்திவேலூர் 6 மி.மீ, புதுச்சத்திரம் 2 மி.மீ, சேந்தமங்கலம் 7 மி.மீ, திருச்செங்கோடு 7 மி.மீ. மாவட்டத்தில் மொத்தம்130.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Updated On: 8 Aug 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’