Begin typing your search above and press return to search.
நாமக்கல் மாவட்ட தேர்தல் பார்வையாளர் வருகை: கலெக்டர், எஸ்பி நேரில் ஆலோசனை
நாமக்கல் மாவட்ட தேர்தல் பார்வையாளராக, நீலகிரி மாவட்ட முன்னாள் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
HIGHLIGHTS
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வருகிற 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, ஒவ்வொரு மாவட்டத்திற்கு தேர்தல் பார்வையாளரை தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.
நாமக்கல் மாவட்ட தேர்தல் பார்வையாளராக, நீலகிரி மாவட்டமுன்னாள் கலெக்டரும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனருமான இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார். அவர், நாமக்கல்லுக்கு வருகை தந்து, அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார்.
அவரை கலெக்டர் ஸ்ரேயா சிங், எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் நேரில் சந்தித்து, தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.