நாமக்கல் மாவட்டக் கூட்டுறவு வார விழா: விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கல்
நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில், நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் மாவட்ட கலெக்டர் விவசாயிகளுக்கு பயிர்கடன்களை வழங்கினார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் 68வது கூட்டுறவு வார விழா ஒரு வாரம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல், பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து 20 விவசாயிகளுக்கு ரூ.16.46 லட்சம் மதிப்பில் பயிர் கடனுக்கான காசோலைகளை வழங்கினார். மேலும், போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன், துணைப்பதிவாளர்கள் வெங்கடாசலபதி, ரவிச்சந்திரன், கர்ணன், அரசு, விஐயகணபதி, பாலசுப்பரமணியன், முகமதுசலீம், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.