Begin typing your search above and press return to search.
நாமக்கல்: 322பேருக்கு கொரோனா தொற்று
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 322 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாகம் கூறியதாவது : நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. குறைந்த சதவீதம் தொற்று பாதித்தவர்களின் அடிப்படையில் இதுவரை வீட்டிலேயே 2192 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று 322 பேர் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். நான்கு பேர் இறந்துள்ளனர். 319பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். போதுமான இருக்கை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து, சுகாதாரத்தை கடைபிடித்தல் அவசியம். இவ்வாறு கூறினார்.