Begin typing your search above and press return to search.
மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: கலெக்டர் உத்தரவு
பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு நாமக்கல் கலெக்டர் உத்தரவிட்டார்.
HIGHLIGHTS
நாமக்கல் கலெக்டர் அலுவலலகத்தில் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களளைப் பெற்றார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 230 மனுக்களைவழங்கினார்கள்.
அவற்றை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பின்னர் கலெக்டர் அலுவலக தரைதளத்திற்கு வந்து மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்றார். நிகழ்ச்சியில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.