/* */

அரசு புறம்போக்கு நிலங்களை நவீன கருவி மூலம் அளவீடு: கலெக்டர் ஆய்வு

அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள ஏரி, நில அளவை துறையினரால், நவீன நில அளவை கருவியான டிஜிபிஎஸ் கருவி மூலம் அளவீடு செய்யும் பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

அரசு புறம்போக்கு நிலங்களை நவீன கருவி மூலம் அளவீடு: கலெக்டர் ஆய்வு
X

நாமக்கல் தாலுகா சிலுவம்பட்டி கிராமத்தில், நவீன டிஜிபிஎஸ் கருவி மூலம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் அளவீடு செய்யும் பணியை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், சிலுவம்பட்டி கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள ஏரி, நில அளவை துறையினரால், நவீன நில அளவை கருவியான டிஜிபிஎஸ் கருவி மூலம் அளவீடு செய்யும் பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில், டிஜிபிஎஸ் கருவியினைக் கொண்டு நீர்நிலைகளை அளந்து வரைபடம் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. நவீன நில அளவை கருவியினை கொண்டு அளவுப்பணி செய்வதால் பூமியில் உள்ள அச்சரேகை மற்றும் தீர்க்கரேகையை கணக்கிட்டு, இருக்குமிடம் சாட்டிலைட் மூலம் எல்லையினை துல்லியமாக நிர்ணயம் செய்யப்பட்டு கூகுள் எர்த் சாட்டிலைட் மேப்பில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், நீர்நிலைகளின் எல்லைகளை இந்த நவீன கருவி கொண்டு அளவீடு செய்யும் பணி தமிழக அரசு மற்றும் ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறது. இப்பணியினால் வருங்காலங்களில் நீர்நிலைகளில் ஏற்படும் ஆக்கிரமிப்புகளை கூகுள் எர்த் சாட்டிலைட் மூலம் எளிதில் கண்காணிக்கலாம். இது வரை நாமக்கல் மாவட்டத்தில் 80 நீர்நிலைகள் இக்கருவியின் மூலம் அளவீடு செய்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், நாமக்கல் தாலுக்கா, சிலுவம்பட்டி கிராமத்தில், அரசு புறம்போக்கு ஏரி, நில அளவை துறையினரால், நவீன நில அளவை கருவி (டிஜிபிஎஸ்) மூலம் அளவீடு செய்யும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது நவீன முறையில் நில அளவீடு செய்யும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தார். ஆய்வின் போது நாமக்கல் ஆர்டிஓ மஞ்சுளா, நாமக்கல் மாவட்ட நில அளவை உதவி இயக்குநர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 3 Jun 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது