/* */

நாமக்கல்லில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை : வேலைக்காரப் பெண்ணுக்கு போலீசார் வலை

நாமக்கல்லில் வீட்டில் தனியாக இருந்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வேலைக்காரப் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை : வேலைக்காரப் பெண்ணுக்கு போலீசார் வலை
X

நாமக்கல்லில் வீட்டில் தனியாக இருந்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வேலைக்காரப் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல், நடராஜபுரம் 4வது தெருவில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி ஜானகி(50) கணவரை பிரிந்து வாழ்ந்த இவருக்கு ராமச்சந்திரன் என்ற மகன் உள்ளார். அவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஜானகி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இதனால் தனியாக இருக்கும் ஜனாகிக்கு உதவியாக கடந்த மாதம் பெண் ஒருவரை வீட்டு வேலை செய்ய ஜானகி நியமித்திருந்ததார். நேற்று அதிகாலை ஜானகி வீட்டில் உள்ள அறையில் இறந்து கிடந்தார். அவரது தலையின் பின் பக்கம் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் நாமக்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த நாமக்கல் இன்ஸ்பெக்டர் குமார், ஜானகியின் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் ஜானகி வீட்டில் பணியாற்றிய பெண் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. ஜானகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அந்தப் பெண்ணை தேடி வருகின்றனர்.

Updated On: 23 Jun 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்