/* */

வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி துவக்கம்

நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி துவக்கம்
X

நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில், வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி துவங்கியது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகள் முனிசிபாலிட்டி மற்றும் டவுன் பஞ்சாயத்து அலுவலகங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் என 5 நகராட்சிகள் மற்றும் 19 டவுன் பஞ்சாயத்துக்கள் உள்ளன.

அந்தந்த முனிசிபாலிட்டி மற்றும் டவுன் பஞ்சாயத்து அலுவலகங்களில், வாக்குப் பதிவுக்கு தேவையான எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் நகராட்சிப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தக் கூடிய வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் அச்சிடப்பட்ட சீட்டு பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. வாக்கு சீட்டுகள் பொருத்தும் பணி நிறைவடைந்த பின்னர் மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படும்.

Updated On: 11 Feb 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’