Begin typing your search above and press return to search.
தாட்கோ திட்ட பயனாளிகளுக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்வு
தாட்கோ திட்டங்களுக்கு எஸ்சி, எஸ்டி பயனாளிகளுக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தாட்கோ திட்டங்களுக்கு எஸ்சி, எஸ்டி பயனாளிகளுக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2022-2023 ஆம் நிதியாண்டு முதல் அரசு உ த்தரவில் தெரிவித்துள்ளபடி, தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவர்களுக்கு (எஸ்சிஎஸ்டி), குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இதைப் பயன்படுத்தி தாட்கோ திட்டங்களில் பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.