நாமக்கல் மாவட்டத்தில் வரும் 8ம் தேதி குடும்ப அட்டைதாரர்களுக்கான குறைதீர் முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் வரும் 8ம் தேதி குடும்ப அட்டைதாரர்களுக்கான குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 8ம் தேதி 8 தாலுக்காக்களில் ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ரேசன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டுக்கு விண்ணப்பித்தல், செல்பேன் நம்பர் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி மேற்கொள்ளவும், பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், ஒவ்வொரு மாதமும் ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.
இந்த மாதத்திற்கான ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் கூட்டம் வருகிற 8ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1மணிவரை. நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளையம் தாலுக்கா வழங்கல் அலுவலகங்களில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் இந்த குறைதீர் முகாமில் கலந்துகொண்டு, ரேசன் கார்டு சம்மந்தமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம். மேலும், பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்துகொள்ளும், பொதுமக்கள் அனைவரும், கொரோனா முன்னெச்சரிக்கை அறிவுரைகளை தவறாமல் கடைபிடித்து, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.