நாமக்கல்லில் பண்ணைக்கழிவுகள் மறுசுழற்சி குறித்து இலவச பயிற்சி முகாம்
Free Training-நாமக்கல்லில் பண்ணைக்கழிவுகள் மறு சுழற்சி குறித்து விவசாயிகளுக்கு இலவச பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
HIGHLIGHTS
Free Training- நாமக்கல் வேளாண்மைஅறிவியல் நிலையம் (கே.வி.கே) மற்றும் திருச்சி துவாக்குடியில் அமைந்துள்ள பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்துடன் இணைந்து பண்ணைக்கழிவுகளை மறுசுழற்சி செய்து மக்கும் உரமாக்குதல் என்ற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது. பாசன மேலாண்மை பயிற்சிமைய இணை இயக்குநர் அழகுநாகேந்திரன், பாசனநீர் தரத்தின் முக்கியத்துவம் மற்றும் மக்கும் உரத்தின் பயன்பாடு குறித்து பேசினார். நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் அழகுதுரை பண்ணைக் கழிவுகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்தல் குறித்து பேசினார். அதனைத் தொடர்ந்து உதவிப்பேராசிரியர் முத்துசாமி பண்ணைக் கழிவுகளை தரமான முறையில் சேகரித்து சேமித்து மக்கும் உரம் தயாரித்தல் குறித்து தொழில்நுட்ப விளக்கம் அளித்தார்.உதவிப்பேராசிரியர் சத்யா, பாசன மேலாண்மை பயிற்சி மைய துணை இயக்குநர் வசந்தா, உதவி இயக்குநர் சுகன்யா தேவி மற்றும் வேளாண் அலுவலர் கலைச்செல்வி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மொத்தம் 41 விவசாயிகள் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர். அவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2