வணிகர் சங்க பேரமைப்புடன் எலச்சிப்பாளையம் வணிகர் சங்கம் இணைப்பு விழா
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன், எலச்சிப்பாளையம் வணிகர்கள் சங்கம் இணைப்பு விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன், எலச்சிப்பாளையம் வணிகர்கள் சங்கம் இணைப்பு விழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், 43வது இணைப்பு சங்கமாக, எலச்சிப்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்கம் இணைப்பு விழா நடைபெற்றது. எலச்சிப்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்கத்தின் தலைவர் ராமசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். செயலாளர் சரவணன் வரவேற்றார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேரமைப்பின் செயல்பாடுகள் குறித்தும், தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைவதன் அவசியம் குறித்தும் பேசினார்.
நிகழ்ச்சியில், பேரமைப்பின் மாநில துணை தலைவர் செல்வராஜ், மாவட்ட இணை செயலாளர் உதயகுமார், ராகவன், பத்மநாபன், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்குமார், பிரபாகரன், பெரியமணலி அனைத்து வணிகர் சங்க தலைவர் தங்கமணி, செயலாளர் சரவணன், பொருளாளர் தங்கம் உள்ளிட்ட திரளானவர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.