அரசு கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு, மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி
Mental Health Awareness Speech -நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் சார்பில் போதைப் பொருள் மற்றும் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
HIGHLIGHTS
Mental Health Awareness Speech -நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் சார்பில் போதைப் பொருள் மற்றும் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார். சேலம் பொது சுகாதாரத்துறை தொற்று நோயியல் நிபுணர் மற்றும் மாவட்ட கோவிட் 19 ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சூர்யபிரகாஷ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது மாணவ, மாணவியர் எவ்வாறு மகிழ்ச்சியோடு நல்ல மனநிலையோடு வாழலாம்.
போதைப் பழக்கவழக்கத்தின் தொடக்கம். அடிமையாவதன் விளைவுகள், அடிமையானவர்கள் எவ்வாறு அதில் இருந்து விடுதலை பெறுவது என்பது குறித்து விளக்கிக் கூறப்பட்டது. மேலும் மாணவ, மாணவியருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ரெட்கிராஸ் சங்கத் திட்ட அலுவலர்கள் வெஸ்லி, சந்திரமோகன், கல்லூரி பேராசிரியர்கள் உள்பட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2