Begin typing your search above and press return to search.
மாணவிகளுக்கு நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பள்ளி,கல்லூரி மாணவிகளுக்கு நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
கோவை, கரூர் உள்ளிட்ட தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் நடைபெறும் பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாமக்கல் பார்க் ரோட்டில் இந்திய மாணவர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். இதில் பாலியல் வன்கொடுமைகளை தடுத்திட வர்மா கமிட்டி அறிக்கையை முழுமையாக அமல்படுத்திட வேண்டும், தவறு செய்பவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதில் நாமக்கல் ஒன்றிய செயலாளர் கார்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தங்கராஜ், கோகுல், அகிலன், மோகனா உள்ளிட்ட ஆர்ப்பாட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.