/* */

வளையப்பட்டியில் உழவர் சந்தை அமைக்க கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை

வளையப்பட்டி பகுதியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

வளையப்பட்டியில் உழவர் சந்தை அமைக்க  கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை
X

கோப்பு படம்

இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்றக்கழக தலைவர் செல்ல ராஜாமணி, பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர், நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுக்கா, வாளையப்படியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மோகனூர் ஒன்றியம், எருமப்பட்டி ஒன்றியம், திருச்சி மாவட்டத்தின் தொட்டியம் ஒன்றியம், நாமக்கல் ஒன்றியம் ஆகிய அனைத்துப் பகுதிகளின் மையப்பகுதியாக வளையப்பட்டி அமைந்துள்ளது. சுற்றி உள்ள கிராமங்களில் ஆயிரக்காணக்கான விவசாயிகள், காய்கறிகள், சின்ன வெங்காயம், கீரை வகைகள், பூக்கள் ஆகியவற்றை அதிகளவில் சாகுபடி செய்து வருகிறார்கள். இவைகளை நாமக்கல், கரூர், சேலம், திருச்சி ஆகிய பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்கவேண்டிய சூழ்நிலை உள்ளது.

வளையப்பட்டி பஞ்சாயத்தில் போதுமான இடவசதி உள்ளதால் அப்பகுதியில் உழவர் சந்தை அமைத்தால், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும், பயனுள்ளதாக அமையும். அது மட்டுமல்லாமல் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நியாயமான விலையில் காய்கறிகள் கிடைக்க வழிவகை ஏற்ப்படும். எனவே வளையப்பட்டியில் உடனடியாக உழவர் சந்தை அமைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 6 Oct 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?