Begin typing your search above and press return to search.
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 3,430 பேருக்கு கொரோனா தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 3,430 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
HIGHLIGHTS
தமிழகத்தில் பெரும்பாலான பொதுமக்கள் இண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இதனால் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. முழுமையாக அனைவருக்கம் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறாது.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 23 மெகா தடுப்பூசி முகாம்களில் 7 லட்சத்து 37 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்தநிலையில் 24ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் 422 மையங்களில் நடைபெற்றது. இந்த முகாம் பணிகளில் டாக்டர்கள், நர்சுகள் உள்பட சுமார் 5 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்ட்டனர். முகாமில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 430 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.