Begin typing your search above and press return to search.
நாமக்கல்லில் வருகிற 20ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
Consumer Grievance -நாமக்கல்லில் வருகிற 20ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
Consumer Grievance -இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்ட சமையல் கேஸ் நுர்வோர் நலன் கருதி சமையல் கேஸ் நிறுவன அதிகாரிகள், சமையல் கேஸ் ஏஜெண்டுகம், விநியோகஸ்தர்கள், நுகர்வோர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோரைக் கொண்டு சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம், வருகிற 20ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. எரிவாயு விநியோகம் சம்மந்தமாக குறைபாடுகள் உள்ள பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2