Begin typing your search above and press return to search.
முட்டாஞ்செட்டியில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
நாமக்கல் அருகே முட்டாஞ்செட்டியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி தாலுக்கா முட்டாஞ்செட்டி ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவில் 100 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு கையேடு மற்றும் சீர்வரிசைப் பொருட்களும், 5 வகை கலவை சாதமும் வழங்கப்பட்டன. விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் லலிதா பங்கேற்று கர்ப்ப கால பராமரிப்பு குறித்து பேசினார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மாலதி, முட்டாஞ்செட்டி பஞ்சாயத்து தலைவர் கமலப்பிரியா, திட்ட மேற்பார்வையாளர்கள் ராணி, லட்சுமி, பரிமளா, வட்டார ஒருங்கிணைப்பாளர் பூபதி, வட்டார திட்ட தவியாளர் பானுப்பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.