Begin typing your search above and press return to search.
உலக ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு தூய்மைப்பணி
உலக ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட ரெட்கிராஸ் தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மைப்பணி நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவுறுத்தலின்படி, உலக ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரி மாணவர்களின் தூய்மைப்பணி நடைபெற்றது. மாவட்ட ரெட்கிராஸ் செயலாளர் ராஜேஷ்கண்ணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி யூத் ரெட்கிராஸ் அமைப்பைச் சேர்ந்த மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கல் பூங்கா, நுழைவு வாயில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றை அகற்றி தூய்மைப்படுத்தினர்.