நாமக்கல் மாவட்டத்தில் 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 7 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.
HIGHLIGHTS
இது குறித்து, நாமக்கல் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மற்றும் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினர் வேலைக்குச் செல்கின்றனரா என்பது குறித்து தொழிலாளர் துறையினர் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி கடந்த 2 மாதங்களில் 45 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
இதில், ஒரு நிறுவனத்தில் 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளியும், 6 நிறுவனங்களில் 18 வயதிற்குட்பட்ட 6 வளரிளம் பருவ தொழிலாளர்கள் என மொத்தம் 7 சிறுவர்கள் பணிபுரிந்து வந்தது கண்டறிப்பட்டது. இக்குழந்தை தொழிலாளர்கள் மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், குழந்தை தொழிலாளர்களையோ, வளரிளம் பருவத்தினரையோ பணிக்கு அமர்த்தினால் குறைந்தபட்ச அபராதம் ரூ. 20 ஆயிரம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.