Begin typing your search above and press return to search.
நாமக்கல்லில் கோவை செழியன் பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தான முகாம்
நாமக்கல்லில் கொங்கு சமூக தலைவர் கோவை செழியின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் நிறுவன தலைவர் கோவை செழியன் பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் தெற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின், இளைஞரணி சார்பில் ரத்ததான முகாம் நாமக்கல்லில் நடைபெற்றது. கொமதேக மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். அரவிந்த் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மணி முகாமை துவக்கி வைத்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர்கள் துரை, அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொமதேக இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் முகாமில் கலந்துகொண்டு ரத்த தானம் அளித்தனர். நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கி டாக்டர் அன்புமலர் மற்றும் பணியாளர்கள் முகாமில் கலந்துகொண்டு ரத்தம் சேகரித்தனர்.