நாமக்கல்லில் ஆட்டோ டிரைவரிடம் ரூ.50,000 கொள்ளை: 3 திருநங்கைகள் கைது
நாமக்கல் நகரில் ஆட்டோ டிரைவரிடம் ரூ.50 ஆயிரம் கொள்ளையடித்த 3 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகில் உள்ள ஏ.களத்தூரைச் சேர்ந்தவர் வசந்த் (22). இவர் சரக்கு ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு நாமக்கல் பஸ் ஸ்டேண்ட் அருகே அவர் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது, நாமக்கல் பெய்யேரிக்கரையைச் சேர்ந்த திருநங்கைகள் அர்ச்சனா (29), லோகேஸ்வரி (26), பவானி (25) ஆகியோர், அங்கு வந்து, ஆட்டோ டிரைவர் வசந்த்திடம் நைசாக பேசி அவரை, பொய்யேரிக்கரை பகுதிக்கு தங்ளது ஸ்கூட்டரில் அழைத்துச்சென்றனர்.
அங்கு அவரை மிரட்டி அவரிடம் இருந்து பணம் ரூ.50 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர். இது சம்மந்தமாக நாமக்கல் போலீசில் வசந்த் புகார் செய்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி, எஸ்எஸ்ஐ வில்பரைட் ஆகியோர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து திருநங்கைகள் அர்ச்சானா, லோகேஸ்வரி, பவானி ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.