/* */

சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய 2 பேர் போக்சோவில் கைது

நாமக்கல் மாவட்டத்தில், குழந்தை திருமணம் செய்த 2 பேர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய 2 பேர் போக்சோவில் கைது
X

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், திருமலைப்பட்டி அடுத்த இடையப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் மகன் கபிநாத் (20) என்பவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்து, குடும்பம் நடத்தி வருவதாக சைல்டு லைன் அமைப்பின் 1098 என்ற தொலைபேசி எண் மூலம் புகார் வந்தது. கலெக்டர் உத்தரவின் பேரில், நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி, இது குறித்து வழக்குப்பதிவு செய்து, கபிநாத்தை போக்சோ போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

* திருச்செங்கோடு தாலுக்கா, வட்டூரை அடுத்த மோர்பாளையத்தை சேர்ந்த 18 வயது சிறுவன், அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை, குழந்தை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவதாக புகார் வந்தது. இதையொட்டி, திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஹேமாவதி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 18 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Jan 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்