/* */

நாமக்கல்: மானியத்துடன் கால்நடை இன்சூரன்ஸ் திட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் மானியத்துடன் தங்கள் கால்நடைகளை இன்சூரன்ஸ் செய்து பயன்பெறலாம்.

HIGHLIGHTS

நாமக்கல்: மானியத்துடன் கால்நடை இன்சூரன்ஸ் திட்டம்
X

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் மானியத்துடன் தங்கள் கால்நடைகளை இன்சூரன்ஸ் செய்து பயன்பெறலாம்.

இது குறித்து கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மானியத்துடன் கூடிய கால்நடை இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நடப்பு ஆண்டிற்கு நாமக்கல் மாவட்டத்தில் 4,900 கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் செய்ய குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30,000 வரை மானியத்துடன் இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம். வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் மானியத்திலும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினருக்கு 70 சதவீதம் மானியத்திலும் இன்சூரன்ஸ் செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு 5 பசு மற்றும் எருமை மாடுகளுக்கு இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் இரண்டரை வயது முதல் 8 வயது உடைய பசு மற்றும் எருமைகளுக்கு இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம். கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் செய்ய விரும்பும் கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தினை அணுகி பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 8 Jun 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு