/* */

3 மணி நேரம் சிலம்பம் சுழற்றி குமாரபாளையம் இளைஞர் உலக சாதனை

குமாரபாளையத்தில் தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுழற்றி இளைஞர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

HIGHLIGHTS

3 மணி நேரம் சிலம்பம் சுழற்றி குமாரபாளையம் இளைஞர் உலக சாதனை
X

குமாரபாளையத்தில் 3 மணி நேரம் சிலம்பம் சுழற்றி சாதனை படைத்த பிரவீன்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜமுத்து-லட்சுமி தம்பதியர். இவர்கள் விசைத்தறி கூலி தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது மகன் பிரவீன், வயது 25.

பொறியியல் பட்டதாரியான பிரவீன், சிலம்பத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். இவர் சிலம்பத்தில் பல சாதனைகளை படைக்க வேண்டும் என எண்ணினார்.

இந்நிலையில், சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுழற்றி பிரவீன் சாதனை படைத்துள்ளார். இவருக்கு நோபல் உலக சாதனை அமைப்பினர் விருது வழங்கி கவுரவப்படுத்தினர்.

இந்த நிகழ்வில் தி.மு.க.நகர பொறுப்பாளர் செல்வம் தலைமை வகித்து தொடங்கி வைத்ததுடன், நிறைவில் பழச்சாறு கொடுத்து சாதனையாளரை பாராட்டினார். பயிற்சியாளர் மோகன்குமார், விடியல் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 20 Aug 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  2. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  4. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  5. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  7. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  8. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  9. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  10. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!