/* */

குமாரபாளையத்தில் டூவீலர் மோதி முதியவர் பலி

குமாரபாளையத்தில் டூவீலர் மோதி முதியவர் பலியானார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் டூவீலர் மோதி  முதியவர் பலி
X
பைல் படம்

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் வசிப்பவர் ராமசாமி,( 74.) விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு 07:30 மணியளவில் சேலம், கோவை புறவழிச்சாலை, பல்லக்காபாளையம் பிரிவு பகுதியில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சாலையை நடந்து கடந்தார்.

அப்போது குமாரபாளையம் பக்கமிருந்து வேகமாக வந்த டூவீலர் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்து, சேலம் ஜி.ஹெச்.இல் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இவர் நேற்று அதிகாலை 06:00 மணிக்கு இறந்தார். டூவீலரில் வந்தவர்கள் பற்றி குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்ததில், வண்டியை ஓட்டி வந்தவர் பவானியை சேர்ந்த இளங்கோவன்,( 25,) கட்டிட மேஸ்திரி, என்பதும், பின்னால் உட்கார்ந்து வந்தவர் சித்தாள் வேலை செய்யும் கவுரி, 35, என்பதும் தெரியவந்தது.

இந்த விபத்தில் இவர்களும் கீழே விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்து ஈரோடு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 Jan 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்