/* */

காவிரி கரையோரம் முன்னோர்களுக்கு திதி கொடுக்க குவிந்த பொதுமக்கள்

குமாரபாளையம் மற்றும் காவிரி கரையோரப்பகுதிகளில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் திதி கொடுத்தனர்.

HIGHLIGHTS

காவிரி கரையோரம் முன்னோர்களுக்கு திதி கொடுக்க குவிந்த பொதுமக்கள்
X

குமாரபாளையம் அருகே உள்ள பவானி சங்கமேஸ்வரர் கோவில் அருகே ஏராளமானோர் காவிரியில் புனித நீராடினர்.

ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, மார்கழி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட முக்கிய அமாவாசை நாட்களில் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில் ஒரு வருடத்திற்கு மேலாக முக்கிய கோவில்கள், ஆற்றங்கரையோரம் ஆகிய பகுதிகளில் திதி கொடுக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. நேற்று தை அமாவாசையாதலால் அரசு திதி கொடுக்க அனுமதி கொடுத்தது.

இதனால் குமாரபாளையம் காவிரி கரையோரப்பகுதிகளில் ஏராளமானோர் திதி கொடுத்தனர். பல மாவட்டங்களில் இருந்து வந்த பொதுமக்கள் காவிரியில் புனித நீராடினர். குமாரபாளையம் அருகே உள்ள பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்திலும் ஏராளமானோர் காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

Updated On: 31 Jan 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  2. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  3. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  5. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  6. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  8. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  10. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி