Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் கைது
குமாரபாளையத்தில் டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்ததுடன், லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஆனங்கூர் ரோடு பழைய அஞ்சல் அலுவலகம் அருகே வசிப்பவர் சுரேஷ்(வயது 30, )கட்டிட கூலி தொழிலாளி. இவர் தனது மொபெட் வாகனத்தில் ஒட்டன்கோவில் அருகே சென்ற போது, பின்னால் வந்த லாரி இவர் வாகனம் மீது மோத, சுரேஷ் பலத்த காயமடைந்தார். குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குமாரபாளையம் போலீசார் இது குறித்து விசாரித்ததில் லாரி ஓட்டுனர் திருச்சியை சேர்ந்த சுரேஷ்(45,) என்பது தெரியவந்தது. லாரி ஓட்டுனர் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.