தெரு விளக்கு இல்லாததால் வீட்டிற்குள்புகுந்து விடும் பாம்புகள்: அச்சத்தில் மக்கள்
குமாரபாளையம் அருகே தெரு விளக்கு இல்லாததால் வீட்டிற்குள் பாம்புகள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன
HIGHLIGHTS
குமாரபாளையம் அருகே தெரு விளக்கு இல்லாததால் வீட்டிற்குள் பாம்புகள் புகுந்து விடுகின்றன.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி ஜெய்ஹிந்த் நகர் பகுதியில் அதிக குடியிருப்புகள் உள்ளன. பலமுறை கேட்டும் இதுவரை மின்விளக்கு வசதி செய்து தரவில்லை. இதனால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தீயணைப்பு படையினரும் பலமுறை வந்து பாம்பு பிடித்து செல்கின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று அங்கு வசிக்கும் சரண்யா( 35,) என்பவரது வீட்டில் பாம்பு ஒன்று புகுந்தது.
இதனை கண்டதும் சரண்யா பயத்தில் அலறினார். அருகிலிருந்தவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் பாம்பை பிடித்து ஆள் நடமாட்டமில்லாத வனப்பதுயில் விட்டனர். பொதுமக்கள் அச்சத்தை போக்கவும், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கவும் உடனே இப்பகுதியில் தெரு விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.