Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் டூவீலர் - லாரி மோதல்: கல்லூரி மாணவர்கள் படுகாயம்
குமாரபாளையத்தில் டூவீலர், லாரி மோதிய விபத்தில், கல்லூரி மாணவர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.
HIGHLIGHTS
சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீராம், 19, ரிஷி, 19. தனியார் கல்லூரி மாணவர்கள். நேற்றுமுன்தினம் இரவு 10:30 மணியளவில், திருப்பூரில் இருந்து சேலம் நோக்கி ஹோண்டா டியோ பைக்கில் புறப்பட்டுள்ளனர். வண்டியை ஸ்ரீராம் ஓட்ட, ரிஷி பின்னால் உட்கார்ந்து வந்துள்ளார்.
சேலம் - கோவை புறவழிச்சாலை, குமாரபாளையம் எதிர்மேடு பகுதி ஜே.கே.கே. நடராஜா கல்லூரி எதிரில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த லாரி, இவர்கள் வந்த டூவீலர் மீது வேகமாக மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
உடனடியாக இருவரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுனரான, ராசிபுரத்தை சேர்ந்த கண்ணன், 54, என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்.