Begin typing your search above and press return to search.
பள்ளிபாளையம் துணை மின்நிலையத்தில் அக்.6 மின் நிறுத்தம்
பள்ளிபாளையம் துணை மின்நிலையத்தில் அக்.6ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் நிறுத்தம் செய்யப்படும்.
HIGHLIGHTS
இதுகுறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் வாசுதேவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
பள்ளிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக அக். 6 ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை பள்ளிபாளையம், வெடியரசம்பாளையம், வெள்ளிகுட்டை, அண்ணா நகர், காடச்சநல்லூர், தாஜ் நகர், ஆயக்காட்டூர், காவேரி ஆர்.எஸ்., ஒடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்காராயன்பேட்டை, பட்லூர் மற்றும் இறையமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.