Begin typing your search above and press return to search.
புதிய ரேசன் கடையை திறக்கக்கோரி குமாரபாளையம் டிஎஸ்ஒ-விடம் மனு
வெப்படை பகுதியில் புதியதாக கட்டப்பட்ட ரேசன் கடையை திறக்ககோரி, குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
HIGHLIGHTS
வெப்படை பகுதியில் புதியதாக கட்டப்பட்ட ரேசன் கடையை திறக்ககோரி குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் டி.எஸ்.ஒ. சித்ராவிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், ஒன்றிய தலைவர் செந்தில்குமார், ஒன்றிய செயலர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இது பற்றி மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் கூறுகையில், வெப்படை பகுதியில் புதியதாக ரேசன் காய் கட்டப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிறது. இந்த கடை திறக்கப்படாமல் உள்ளதால், அங்கு சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. இதனை தவிர்க்க உடனே அந்த புதிய ரேசன் கடையை திறக்க வேண்டும் என்றார்.