/* */

வேகத்தடைக்கு வெள்ளை பெயிண்ட் அடிக்கக்கோரி நகராட்சி கமிஷனரிடம் மனு

குமாரபாளையத்தில், வேகத்தடைகளுக்கு வெள்ளை பெயிண்ட் அடிக்கக்கோரி நகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

வேகத்தடைக்கு வெள்ளை பெயிண்ட் அடிக்கக்கோரி நகராட்சி கமிஷனரிடம் மனு
X

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில்,   வேகத்தடைகளில் வெள்ளை பெயிண்ட் அடிக்கக்கோரி, நகராட்சி கமிஷனர் சசிகலாவிடம் மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையம் நகரில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை, காந்திபுரம் சாலை, இடைப்பாடி சாலையில் காவேரி நகர் பஸ் நிறுத்தம் பகுதி, விட்டலபுரி பகுதி, ஐயன் தோட்டம், தம்மண்ணன் சாலை, நாராயண நகர், அம்மன் நகர், நடராஜா நகர், அம்மன் நகர், திருவள்ளுவர் வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள வேகத்தடைகள் மீது வெள்ளை பெயிண்ட் அடிக்கப்படாமல் உள்ளது. இதனால், வாகனங்களில் வருபவர்கள், வேகத்தடை இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், மக்கள் நீதிமய்யம் கட்சியின் குமாரபாளையம் நகர மகளிரணி செயலர் சித்ரா தலைமையில், நிர்வாகிகள் ரேவதி, உஷா, சுஜாதா, ஜெயந்தி, தாமோதரன் உள்ளிட்டோர், நகராட்சி கமிஷனர் சசிகலாவிடம், இது தொடர்பாக மனு கொடுத்தனர். அதில், வேகத்தடைகளுக்கு வெள்ளை பெயிண்ட் அடித்து, விபத்தால் யாரும் பாதிக்கப்படாமல் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் சசிகலா தெரிவித்தார்.

Updated On: 11 Dec 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது